ராஜபாளையத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் தமிழ் வழியில் பயிலும் 100 மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை இலவசமாக வழங்கப்பட்டது.
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில், தனியார் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு இலவசமாக புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் 3 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை தேர்வு செய்தனர். மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் எழுதிய "மூளைக்குள் சுற்றுலா' என்ற புத்தகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


