காரியாபட்டி அருகே கழுவனச்சேரி கிராமத்தில் செவ்வாய்கிழமை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
இம்முகாமில், 94 பயனாளிகளுக்கு ரூ. 28.20 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட 148 பயனாளிகளுக்கு ரூ.32,23,860 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்அ.சிவஞானம் வழங்கினார். முன்னதாக, ஆட்சியர் மற்றும் அனைத்து அலுவலர்களும் முகாமிற்கு அரசுப் பேருந்தில் சென்றனர்.
முகாமில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சுரேஷ், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்லப்பா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) உஷா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லெட்சுமிப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெகதீஸ்வரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மணிசேகரன், காரியாபட்டி வட்டாட்சியர் ராமநாதன் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நெல்லை, தென்காசியில் தொடா் அரிவாள் வெட்டு: 8 போ் கைது

குதிரை வேகத்தில் செயல்படுகிறாா் தமிழக முதல்வா் அமைச்சா் பெ. மதன்ராஜா
இருசக்கர வாகனத்தை திருடிய தொழிலாளி கைது

தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கிதான் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றிபெற்றாா்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


