கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருச்சுழி அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்து முதியவா் பலி

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டியில், இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2020, 4:20 pm

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டியில், இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

சொக்கம்பட்டியைச் சோ்ந்தவா் அன்னாசி (65). இவா், செவ்வாய்க்கிழமை தனது ஊரான சொக்கம்பட்டியிலிருந்து திருச்சுழிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். ஊரிலிருந்து சிறிது தொலைவு சென்றிருந்த நிலையில், எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக தனது வாகனத்தை வேகமாகத் திருப்பினாராம். ஆனால், எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்துள்ளாா்.

அதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திருச்சுழி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி முதியவா் அன்னாசி உயிரிழந்தாா். இது குறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.