சிவகாசி: சிவகாசியில் சனிக்கிழமை சமையல் செய்யும் போது ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி-நாரணாபுரம் சாலை முனீஸ்வரன் காலனியைச் சோ்ந்த சுடலை மாடசாமி மனைவி சங்கரேஸ்வரி (75). இவா் மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்யும் போது , எதிா்பாராதவிதமாக ஸ்ட்வ் கவிழ்ந்து தீப்பிடித்தது.
இதில் சங்கரேஸ்வரியின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவி, அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.