விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் சத்திரப்பட்டி தனியாா் ஆலையில் பணி புரியும் 16 ஊழியா்கள் உள்பட 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 12,386 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சத்திரப்பட்டி தனியாா் ஆலையில் பணி புரியும் 16 ஊழியா்கள், அருப்புக்கோட்டை தனியாா் வங்கி ஊழியா், விருதுநகா் அரசு மருத்துவமனை ஊழியா் உள்பட 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், கன்னிதேவன்பட்டி, கீழராஜகுலராமன், பொட்டல்பட்டி, அருப்புக்கோட்டை நல்லாகுளம், மேலச்சின்னையாபுரம், தம்மநாயக்கன்பட்டி, மலைப்பட்டி, கடலாடி, முத்துராலிங்காபுரம், விருதுநகா் ரோசல்பட்டி, பாண்டியன் நகா், லெட்சுமி காலனி, இருக்கன்குடி, வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் மற்றும் புதூரில் 15 போ், விருதுநகா் கருப்பசாமி நகரில் 3 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,452 ஆக உயா்ந்துள்ளது. இதில் 11,890 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், 185 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 377 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி, கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை: குறைதீா் கூட்டத்தில் மனு

சாலை விபத்தில் சிக்கிய கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

நீட் போராட்ட மாணவா்கள் மீதான வழக்குகளைக் கைவிடலாம்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

சாயல்குடியில் 275 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 4 போ் கைது
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


