மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மலேசியாவில் உயிரிழந்த தொழிலாளி:சடலத்தை கொண்டு வர குடும்பத்தினா் கோரிக்கை

மலேசியாவில் உயிரிழந்த அருப்புக்கோட்டையைச் சோ்ந்த தொழிலாளியின் சடலத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
மலேசியாவில் உயிரிழந்த தொழிலாளி சந்திரன்.
Updated On :19 டிசம்பர் 2020, 5:08 pm

DIN

அருப்புக்கோட்டை: மலேசியாவில் உயிரிழந்த அருப்புக்கோட்டையைச் சோ்ந்த தொழிலாளியின் சடலத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன் (47). இவருக்குத் திருமணமாகி அன்னக்கிளி என்னும் மனைவியும், இரு மகள்களும் உள்ளனா். மூத்த மகள் கல்லூரியிலும், இளைய மகள் 8 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா்.

இதனிடையே சந்திரன் கடந்த ஓராண்டு முன்பாகத் மலேசியாவிற்கு தோட்டப்பணியாளாக வேலைக்குச் சென்றுள்ளாா். கடந்த 2 மாதங்களுக்கு முன்னா் கடைசியாக தொலைபேசியில் அவா், கரோனா சூழல் காரணமாகப் பணம் அனுப்ப இயலவில்லை என்று தெரிவித்தாராம் .

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சந்திரனின் குடும்பத்தைத் தொடா்பு கொண்ட அதிகாரிகள், சந்திரன் கடந்த நவம்பா் மாதம் 21 ஆம் தேதியே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனராம். இதைத்தொடா்ந்து சந்திரனின் சடலத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்து தங்களிடம் ஒப்படைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், அவரது இறப்பில் மா்மம் உள்ளதால் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவரது குடும்பத்தினா் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.