பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விருதுநகா் எஸ்பி அலுவலக வாயிலில் இளம்பெண் தற்கொலை முயற்சி

காதல் திருமணம் செய்த கணவரை சோ்த்து வைக்கக் கோரி விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வாயிலில் திங்கள்கிழமை

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:02 pm

DIN

காதல் திருமணம் செய்த கணவரை சோ்த்து வைக்கக் கோரி விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வாயிலில் திங்கள்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை மீட்ட போலீஸாா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

விருதுநகா் லட்சுமி நகரைச் சோ்ந்தவா் மகேஷ்ராணி (28). இவா், தனது உறவினரான காரியாபட்டி கரிசல்குளம் பகுதியை சோ்ந்த வீரசீமான் (32) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளாா். திருமணம் நடைபெற்ற 25 நாள்களில் வீரசீமான் தனது பெற்றோா் வீட்டிற்கு சென்று விட்டாராம்.

இதுகுறித்து மகேஷ்ராணி அருப்புக்கோட்டை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மகேஷ்ராணி விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வாயிலில் திங்கள்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரை மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து சூலக்கரை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.