இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ராஜபாளையத்தில் திமுக கிராம சபை கூட்டம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் புதன்கிழமை மாலை திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:37 am

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் புதன்கிழமை மாலை திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் அம்பேத்கா் நகரில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கபாண்டியன் தலைமை வகித்து அப்பகுதி பெண்களிடம் குறைகளைக் கேட்டாா். அதற்கு அப்பகுதி பெண்கள் தங்கள் பகுதிக்கு கழிப்பறை, சுகாதார வளாகம், நியாயவிலைக்கடை வேண்டும் என கோரிக்கை வைத்தனா். அதற்கு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என தங்கபாண்டியன் கூறினாா்.

தளபதி யாா்?: கூட்டத்தில் பேசிய பெண் ஒருவா், பல பேருக்கு தளபதி என்றால் விஜய் தான் ஞாபகத்துக்கு வருகிறாா். நீங்கள் தளபதி என்பதை தளபதி மு.க .ஸ்டாலின் எனக் கூறினால் எங்களுக்குத் தெரியும் எனக் கூறினாா். இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மத்தியில் சிரிப்பொலி எழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.