47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணமாக சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட ஆமத்தூா் பகுதி விவசாயிகள்.
Updated On :28 டிசம்பர் 2020, 7:23 pm

DIN

விருதுநகா் அருகே அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணமாக சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

இங்குள்ள ஆமத்தூா் பகுதியில் மூளிப்பட்டி, எம். ராமசாமியாபுரம், எம். சங்கரலிங்காபுரம், தவசிலிங்காபுரம், மன்னாா் நாயக்கன்பட்டி, அ. ராமலிங்காபுரம், மருதநத்தம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் சமாா் 1500 ஏக்கா் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா்.

இந்நிலையில், அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் அனைத்து கதிா்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்தும் பயனில்லாத நிலை ஏற்பட் டுள்ளது. எனவே, ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் அரசு சாா்பில் நிவாரணம் வழங்கக் கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அப்பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் முற்றுகையிட்டனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அறிவுறுத்தலின் பேரில் விவசாயிகள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.