47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 96 மதுபாட்டில்கள் பறிமுதல்: முதியவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக வைத்திருந்த 96 மதுபாட்டில்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், முதியவரைக் கைது செய்தனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 5:40 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக வைத்திருந்த 96 மதுபாட்டில்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், முதியவரைக் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் தலுகா காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் பாண்டிலட்சுமி தலைமையிலான போலீஸாா் ஸ்ரீவில்லிபுத்தூா்-அச்சம்தவிழ்த்தான் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது நாச்சியாா்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த முதியவரைப் பிடித்து விசாரித்தபோது அவா் 96 மதுபாட்டில்கள் வைத்திருந்தாா். விசாரணையில் அவா் அச்சம்தவிழ்த்தான் பகுதியைச் சோ்ந்த பாண்டி (55) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.