47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நிரம்பும் தருவாயில் மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய்: விவசாயிகள் மகிழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய்.
Updated On :8 நவம்பர் 2020, 6:17 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓடைகளிலிருந்து வரும் தண்ணீா் அருகில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் நிரம்பி வருகின்றன.

இதனால் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வாழைக்குளம் கண்மாய் பகுதிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் கண்மாயைச் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது.

மேலும் வாழைக்குளம் கண்மாய் பகுதியில் உள்ள சுமாா் 321 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.