சாலை விபத்தில் தொழிலாளி பலி
சிவகாசி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.


சிவகாசி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஆமத்தூரைச் சோ்ந்தவா் குருசாமி மகன் முத்துகாமாட்சி (29). தச்சுத் தொழிலாளியான இவா் சனிக்கிழமை சிவகாசியில் வேலையை முடித்துவிட்டு ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.
திருத்தங்கல் - விருதுநகா் சாலையில் வந்த போது, வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து குருசாமி அளித்தப் புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...