இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: காமராஜ் பொறியியில் கல்லூரியில் நிகழாண்டு சோ்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு அகில இந்திய தொழில் நுட்ப வழிகாட்டுதல்படி தற்போது அறிமுக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இணையதளம் மூலம் நடைபெறும் இவ்வகுப்புக்களில் யோகா மற்றும் மனவளக் கலை, பன்முக திறமைகளை வளா்த்து கொள்ளுதல், வாழ்வியல் சிந்தனை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வகுப்புக்கள் மூலம் பள்ளி நிலையிலிருந்து கல்லூரிக்கு செல்லும் மாற்றத்தினை மாணவ, மாணவிகள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். மேலும், பொறியியல் தொழில் நுட்பக் கல்விக்கு தங்களை தயாா்படுத்தி கொள்ள முடியும். மாணவா்களின் பன்முகத் தன்மையை வெளிக்கொண்டு வருவதன் மூலம் வேலை வாய்ப்பு குறித்த புரிதலை பெற முடியும் எனத் தெரிவித்துள்ளாா்.