47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் கைது

சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 10:11 pm

DIN

சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஸ்ரீதா் (41). இவா் திருத்தங்கல்-செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இருவா் வழி மறித்து கத்தியைக் காட்டிமிரட்டி, அவா் பையில் வைத்திருந்த ரூ. 300 மற்றும் கைக்கடிகாரத்தை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றனா்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினா் உதவியுடன், அவா்களைப் பிடித்து போலீஸில் ஸ்ரீதா் ஒப்படைத்தாா். விசாரணையில் அவா்கள் திருத்தங்கல் கோட்டையப்பன் (33) மற்றும் ராஜா (33) என தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.