சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வரும்பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை

சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On :4 செப்டம்பர் 2020, 5:50 pm

சாத்தூா்: சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியா் அலுவலகம், சாா் பதிவாளா் அலுவலகம், அரசு கருவூலம் மற்றும் அரசு பொது இ. சேவை மையம் போன்ற அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சாத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலைய வாகனத்தில் வைத்து, பொதுமக்களுக்கு கபம் மற்றும் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை மேற்கொண்டனா்.

இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, சாத்தூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மற்றும் செவிலியா்கள் கரோனா பரிசோதனை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.