காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளித்த அருப்புக்கோட்டை விவசாயி

அருப்புக்கோட்டை வட்டம் கஞ்சநாயக்கனபட்டியைச் சேர்ந்த விவசாயியும் ஒன்றிக்குழு உறுப்பினருமான சீனிவாசன் என்பவர், தனது சாகுபடி நிலத்தில் விளைந்த பயிர்களுக்கு ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளித்து நவீன தொழில்

News image
ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளித்த அருப்புக்கோட்டை விவசாயி.
Updated On :28 ஆகஸ்ட் 2021, 12:30 pm

DIN

அருப்புக்கோட்டை வட்டம் கஞ்சநாயக்கனபட்டியைச் சேர்ந்த விவசாயியும் ஒன்றிக்குழு உறுப்பினருமான சீனிவாசன் என்பவர், தனது சாகுபடி நிலத்தில் விளைந்த பயிர்களுக்கு ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளித்து நவீன தொழில்நுட்பத்தில் இறங்கியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன்.ஒன்றியக்குழு உறுப்பினரும், விவசாயியுமான இவர் கூறியதாவது, தற்போது, விவசாயக் கூலிவேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடாக உள்ளது. மேலும் அவர்களது கூலியும் உயர்த்தப்பட்டுள்ளதாலும், மேலும் பல காரணிகளாலும் சிறு மற்றும் குறுவிவசாயிகளின் சாகுபடிக்கான செலவும் பலமடங்கு அதிகரித்துள்ளது. 

இதனால் செலவுகளைக் குறைக்க நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்திட யோசித்ததில், வாடகை ட்ரோன் மூலம் முதற்கட்டமாக விளைந்த பயிர்களுக்கு பூச்சிமருந்து அடிக்க முடிவுசெய்து இன்று(சனிக்கிழமை) அதை நடைமுறைப்படுத்தியுள்ளேன். இதனால் ஒரே நேரத்தில் பலதொழிலாளர்களுக்குத் தரும் கூலியும், நேரமும் மிச்சமாகியுள்ளது.

இனி இதேபோல பலவித நவீன தொழில்நுட்பங்களால் உற்பத்தி செலவைக்குறைக்க பலகட்ட நடைமுறைகளைப் புகுத்திடவும் திட்டமிட்டுள்ளேன் என அவர் தெரிவித்தார்.  மேலும் விவசாயவிளை பொருட்களைக்கொண்டு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்து லாபத்தைப் பெருக்கிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.