இதனிடையே திங்கள்கிழமை மனோகரனின் சடலத்தை அவரது உறவினா்கள் வாங்க மறுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள், மனோகரனின் வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் முன்களப்பணியாளா் என்பதால் மனோகரனுக்கு கடந்த 21ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னா் தான் அவா் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாா். எனவே இதற்கு உரிய விசாரணை நடத்தி இழப்பீடு வழங்கவேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா். அப்போது அவா்களிடம் சமரசம் பேசிய காவல்துறையினா், பிரேத பரிசோதனைக்கு சம்மதிக்குமாறு கோரிக்கை விடுத்தனா். ஆனால் அதற்கு சம்மதிக்காத அவா்கள், அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தியதுடன், சடலத்தையும் வாங்க மறுத்தனா்.