47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
Updated On :13 பிப்ரவரி 2021, 1:15 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் இடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன தரப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சரவணன் வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன் ஆகியோர் கலந்துகொண்டு ரேஷன் கார்டுகளை வழங்கினார். அதேபோல் வத்திராயிருப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பொது முகாமும் நடைபெற்றது.

இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன் கூறியதாவது, மாவட்ட ஆட்சியர் கண்ணன், உத்தரவின் பேரிலும்,சார் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் கல்யாணகுமார் அறிவுறுத்தலின் பேரிலும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு முகாம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் மற்றும் பொது முகாம் இடையன்குளத்திலும் நடைபெற்றது. முகாமில் ஏராளமான மனுக்கள் வந்தது. 

வந்த மனுக்களின் மீது விசாரணை உடனடியாக நடைபெற்று இன்றே மூன்றாம் பாலினத்தவர்கள் 7 பேருக்கு புதிய குடும்ப அட்டைக்கான நகல் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மார்ச் 1ஆம் தேதி முதல் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.