47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாளையம்பட்டி ஸ்ரீசத்குரு சுப்பாஞானியார் கோயிலில் மாசிமகம் பெளர்ணமி சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியிலுள்ள ஸ்ரீ சத்குரு சுப்பாஞானியார் அடங்கிய கோயிலில் குருபூஜை மற்றும் மாசிமகம் பெளர்ணமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
பாளையம்பட்டியில் ஸ்ரீசத்குரு சுப்பாஞானியார் திருக்கோயிலில் குருபூஜை மற்றும் மாசிமகம் சிறப்பு வழிபாடு .
Updated On :27 பிப்ரவரி 2021, 1:18 pm

DIN

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியிலுள்ள ஸ்ரீ சத்குரு சுப்பாஞானியார் அடங்கிய கோயிலில் குருபூஜை மற்றும் மாசிமகம் பெளர்ணமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், பாளையம்பட்டியில் வாழ்ந்துவந்த சத்குரு ஸ்ரீசுப்பாஞானியார் என்பவர் மாசிமகம் அன்று முக்தியடைந்தார். எனவே அவரது சமாதியில் கோயில் கட்டியதுடன், ஆண்டுதோறும் மாசிமகத்தன்று அவ்வூரிலுள்ள ஆயிரவசிய காசுக்காரச்செட்டியார் உறவின் முறையினர் பரம்பரை பரம்பரையாக விழா எடுத்து நடத்தி வருகின்றனர். 

இதன்படி இந்த ஆண்டும் சனிக்கிழமை மாசிமகம் நட்சத்திரத் தேதியில் ஸ்ரீசத்குரு சுப்பாஞானியாருக்கு குருபூஜை விழாவை முன்னிட்டு அன்று காலை மற்றும் நண்பகல் வேளைகளில் சிறப்பு அபிஷேகங்களுடன், தீப, தூப ஆராதனைகள் செய்து வழிபாடு நடைபெற்றது. 

அப்போது சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு நமச்சிவாயர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இவ்வழிபாட்டில் கலந்துகொண்ட சுமார் 30க்கு மேற்பட்ட சிவனடியார்களுக்கு மரியாதை செய்து சிறப்பு ஆடை தானம், அன்னதானம் வழங்கப்பட்டது. அதனையடுத்து சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இக்கோயிலில் வழிபடும் தம்பதியர்க்கு அருள்மிகு சத்குருவின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்து வருவதால் பல்வேறு ஊர்களிலிருந்தும் குழந்தை பாக்கியம் வேண்டி சுமார் 10க்கு மேற்பட்ட தம்பதியர் சகிதமாக விழாவில் கலந்துகொண்டு சிறப்புப் பிரசாதம் பெற்றனர்.

சுமார் 2000ற்கு மேற்பட்ட பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.