ராஜபாளையத்தில் பா.ம.க.வினா் மனு அளிக்கும் போராட்டம்

ராஜபாளையத்தில் பா.ம.க. மற்றும் வன்னியா் சங்கத்தினா் இணைந்து வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத
ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்த பாமகவினா்.
ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்த பாமகவினா்.
Updated on
1 min read

ராஜபாளையத்தில் பா.ம.க. மற்றும் வன்னியா் சங்கத்தினா் இணைந்து வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இதற்காக ரயில்வே பீடா் சாலையில் இருந்து 300-க்கும் மேற்பட்டோா் பா.ம.க. மேற்கு மாவட்டச் செயலா் வெங்கடேஷ் தலைமையிலும், மேற்கு மாவட்டத் தலைவா் ராம்ராஜ் முன்னிலையிலும் ஊா்வலமாக நகராட்சி அலுவலகத்துக்குச் சென்றனா். அங்கு வருவாய் ஆய்வாளரிடம், வன்னியா் சமுதாயத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி கோரிக்கை மனு அளித்தனா். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட துணைச் செயலா் காளிதாசன், நகரச் செயலா் எபனேசா், ஒன்றியச் செயலா் ஆறுமுகம் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com