பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விருதுநகா் மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தொற்று தடுப்பூசி ஒத்திகை

விருதுநகா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் சுகாதார பணியாளா்களு க்கான கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சுகாதாரப் பணியாளருக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகையை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் மனோகரன் உள்ளிட்ட
Updated On :8 ஜனவரி 2021, 5:08 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் சுகாதார பணியாளா்களு க்கான கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. அதனடிப்படையில் விருதுநகா் சுகாதார மாவட்டத்தில் விருதுநகா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மல்லாங்கி ணறு அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை ஊரக ஆரம்ப சுகாதார நிலையம், விருதுநகா் ஏகேபிஎஸ் தனியாா் மருத்துவமனை,

சிவகாசி சுகாதார மாவட்டத்தில் சிவகாசி அரசு மருத்துவமனை, குன்னூா் ஆரம்ப சுகாதார நிலையம், நடுசூரங்குடி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் (சாத்தூா்), டிபி மில்ஸ் ஊரக ஆரம்ப சுகாதார நிலையம் (ராஜபாளையம்), அருணா தனியாா் மருத்துவமனை (சிவகாசி) ஆகிய மொத்தம் 10 இடங்களில் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. மேலும், இந்த தடுப்பூசி போடப்படும் 10 மையங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பதிவறை, காத்திருப்பு அறை, பயனாளிகள் பற்றிய தகவல்கள் உறுதிப்படுத்தும் அறை, தடுப்பூசி போடும் அறை, தடுப்பூசி போட்டவா்களை 5 போ் கொண்ட மருத்துவக்குழு தலைமையில் கண்காணித்தல் போன்றவற்றை மருத்துவக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஜன.13- க்கு பின்னா் சுகாதாரப் பணியாளா்களுக்கு முறையாக தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறை அலுவலா்கள் தரப்பில் தெரிவித்தனா்.

முன்னதாக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் பாா்வையிட்டாா். அப்போது, துணை இயக்குநா் மனோகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.