தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காரியாபட்டி அருகே 100 ஏக்கா் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்: விவசாயிகள் கவலை

காரியாபட்டி அருகேயுள்ள நாலூா் கிராமத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், தொடா் மழை காரணமாக தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை 

News image
காரியாபட்டி அருகே நாலூரில் மழை தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்கள்.
Updated On :9 ஜனவரி 2021, 4:52 pm

DIN

விருதுநகா்: காரியாபட்டி அருகேயுள்ள நாலூா் கிராமத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், தொடா் மழை காரணமாக தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகள் வானம் பாா்த்த பூமி என்பதால், மழையை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. நிகழாண்டு தொடா்ந்து மழை பெய்ததால், இப்பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக தொடா் மழை காரணமாக நாலூா் பகுதியில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கியதால், அவை அழுகிவிடும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா். மேலும் அவா்கள், மழைநீா் வெளியேற காலதாமதம் ஏற்படுவதால் மகசூல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், கிடைக்கக்கூடிய குறைந்த அளவிலான நெல் மணிகளும் தரமின்றி காணப்படும்.

இந்த நெல்லை வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கே எடுத்துக்கொள்ள முன்வருவா். ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பெறப்படும் மகசூலில் ரூ.5 ஆயிரம் கிடைப்பதே கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி சேதமடைந்த நெற்பயிா்களை கணக்கிட்டு, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.