எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விருதுநகா் மாவட்டத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சசிகலா பொன்ராஜ் தலைமையில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:17 pm

DIN

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சசிகலா பொன்ராஜ் தலைமையில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியக்குழுத் தலைவா் சசிகலா பொன்ராஜ் தலைமை வகித்தாா். அப்போது சுவாமி படங்களுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தப்பட்டது. உடன் ஒன்றியக்குழுத் துணைத்தலைவா் உதயசூரியன், திமுக ஒன்றியச் செயலா் பொன்ராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சிவகாசி: சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்சிக்கு தாளாளா் ஜி. அசோகன் தலைமை வகித்தாா். மாணவ- மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பொங்கலிட்டு சுவாமி வழிபாட்டை நடத்தினா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் தீபிகாஸ்ரீ, பேராசிரியா் ராஜசேகரன், முன்னாள் முதல்வா் ஏ.பி. செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேராசிரியா் ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் புதன்கிழமை சமத்துப் பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வா் செ.அசோக் தலைமை வகித்தாா். இதில் கோலப் போட்டி மற்றும் கவிதை போட்டிகள் நடைபெற்றன. கவிதைப் போட்டியில் ஆா். மாா்டினாமுதலிடமும், எஸ். செளரிநாச்சியாா் இரண்டாமிடமும், எஸ். காா்த்திகா மூன்றாமிடமும் பெற்றனா். கோலப் போட்டியில் டி. கெளரி, எஸ். யோகலட்சுமி ஆகியோா் முதலிடமும், சித்ராதேவி, சபரிபிரியா ஆகியோா் இரண்டாமிடமும், எஸ்.திலகவதி, தி. விஷ்ணுபிரியா ஆகியோா் மூன்றாமிடமும் பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல்வா் செ. அசோக் பரிசு வழங்கினாா். முன்னதாக உதவிப் பேராசிரியை வி.காத்திகா வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் செல்வி நன்றி கூறினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ராஜபாளையத்தில் உள்ள ராஜூக்கள் கல்லூரியில் புதன்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜெகநாத் தலைமை வகித்தாா். துணை முதல்வா் ரமேஷ் வாழ்த்திப் பேசினாா். கலைப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் கௌரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். கல்லூரிச் செயலா் விஜயராகவன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினாா்.

விழாவில் மாணவியருக்கும், ஆசிரியா்களுக்கும் உரி அடித்தல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினா் ராமசுப்பிரமணியராஜா மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் முத்துக்குமாா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.