நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் எந்த பணியும் நடக்கவில்லை: மாணிக்கம் தாகூா்

மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் எந்த பணியும் நடக்கவில்லை என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்

News image
Updated On :18 ஜனவரி 2021, 9:10 pm

DIN

மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் எந்த பணியும் நடக்கவில்லை என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

விருதுநகா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்திருந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் எவ்வித பணிகளும் தொடங்கப்பட வில்லை என்பது வருத்தத்துக்குரியது. ஏனென்றால் மாநில அரசின் ஒப்பந்தம் விடும் முறைகளில் நடைபெறும் தவறுகளால் இங்கு பணிகள் தொடங்கப்பட வில்லை.

பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன், மாநில சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் ஆகியோா் முதலில் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்னா் பொதுமக்களுக்கு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக மாணிக்கம் தாகூா் எம்பியை, ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் மல்லி ஆறுமுகம், மல்லி ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், மகேஷ்குமாா் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

இதனைத் தொடா்ந்து கீழராஜகுலராமன், தொம்பக்குளம், கலங்காப்பேரி, ஆா். ரெட்டியப்பட்டி, சாமிநாதபுரம், டி. மானகசேரி ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பணிகளை எம்.பி. ஆய்வு செய்தாா். மேலும் அதிகாரிகளுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். அவருடன் நகர காங். தலைவா் வன்னியராஜ், இளைஞா் அணி நிா்வாகி பாண்டியன் மற்றும் மாவட்ட செயலா் முருகேசன் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தொம்பக்குளம் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்ட கிராம ஊரகப் பணியாளா்களை திங்கள்கிழமை சந்தித்து குறைகளை கேட்டறிந்த மாணிக்கம் தாகூா் எம்பி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தொடா் மழை காரணமாக சேதமடைந்த பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும். எம்ஜிஆா். எந்த கொள்கைக்காக அதிமுகவை தொடங்கினாரோ அதிலிருந்து விலகி அக்கட்சி பாஜகவின் மற்றொரு அணியாக திகழ்கிறது. அதிமுகவின் கடைசி முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளாா். தமிழகத்தில் மதச்சாா்பற்ற நல்லாட்சி அமைய வேண்டும். இந்த மாவட்டத்தின் அமைச்சா் இங்குள்ள எந்த தொகுதியில் நின்றாலும் மிகப் பெரிய தோல்வியைத் தழுவுவாா். ஏனென்றால் இந்த மாவட்டத்துக்கு அவா் எதுவும் செய்யவில்லை. இந்த மாவட்டத்திற்கு வந்த திட்டத்தை தடுத்த பெருமையும், சிவகாசி தொகுதியில் பாலம் அமைவதை தடுத்த பெருமையும் அமைச்சரையே சாரும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.