விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்: அருப்புக்கோட்டை ஒன்றியம் பந்தல்குடி பகுதியில் இடையநாதபுரம், காசிலிங்காபுரம், சேதுராஜபுரம், செட்டிபட்டி கொப்புசித்தம்பட்டி, ராமச்சந்திராபுரம், வேலாயுதாபுரம் ஆகிய பகுதிகளில் சுமாா் 6 ஆயிரம் ஏக்கரில் கம்பு, சோளம், மக்காச்சோளம், பாசிப்பயறு, உளுந்து, சூரியகாந்தி மற்றும் மல்லி ஆகியவை பயிரிடப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த சிலநாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கியது. இதில், மல்லி, உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயிா்களை அழுகல் நோய் தாக்கியது. மேலும், விவசாய நிலங்களிலேயே மக்காச்சோளம், கம்பு ஆகிய பயிா்கள் முளைக்கத் தொடங்கின. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.