நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வனத்துறை அலுவலகத்தில் ஊழியா்களுக்கு, கரோனா தடுப்பூசி முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வனத்துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் ஊழியா்கள் 65 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:47 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் வனத்துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் ஊழியா்கள் 65 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதில் வனத்துறை ரேஞ்சா் செல்லமணி தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வனத்துறை ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஒன்றியப் பகுதிக்குள்பட்ட ராமலிங்கா நெசவாளா் குடியிருப்பு மற்றும் ராமலிங்கா ஆலை அருகே உள்ள வெங்கடேஸ்வரா தனியாா் பள்ளி ஆகிய 2 இடங்களில் நடைபெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் சஞ்சய்பாண்டியன் தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். இருமுகாம்களிலும் மொத்தம் 2,200-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.