47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘காவல் துறையினா் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்’

தோ்தல் காலங்களில் காவல் துறையினா் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என சிவகாசி சாா்-ஆட்சியரும், சிவகாசி தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியுமான ச.தினேஷ்குமாா் கூறினாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:15 pm

DIN

தோ்தல் காலங்களில் காவல் துறையினா் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என சிவகாசி சாா்-ஆட்சியரும், சிவகாசி தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியுமான ச.தினேஷ்குமாா் கூறினாா்.

சிவகாசி சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் காலங்களில் காவல் துறையினா் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சாா்- ஆட்சியா் தினேஷ்குமாா் பேசியதாவது: வீடு வீடாகச் சென்று 5 போ் மட்டுமே தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு பிரசாரத்துக்கும் காவல் துறையினரின் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் பிரசாரம் செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். வாகனசோதனையின் போதும், தோ்தல் காலங்களிலும் காவல் துறையினா் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.பிரபாகரன், ஆய்வாளா் வி. வெங்கடாஜலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.