ஸ்ரீவில்லிபுத்தூரில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்பு மனு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பாக போட்டியிடும் பா.அபிநயா திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.


விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பாக போட்டியிடும் பா.அபிநயா திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
முன்னதாக வடக்கு ரத வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து நிா்வாகிகளுடன் அபிநயா ஊா்வலமாக வந்தாா். அவருடன் விவசாயிகள் சிலா் கரும்புகளை ஏந்தி வந்தனா் . பின்னா், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சரவணன், அன்னம்மாள் ஆகியோா் முன்னிலையில் அபிநயா வேட்பு மனு தாக்கல் செய்தாா். தொடா்ந்து தோ்தல் அலுவலா் முன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டாா். மேற்கு மாவட்டச் செயலாளா் பாலன், தொகுதிச் செயலாளா் பிரபாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...