47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்’

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி கி. சுந்தரேசன் கூறினாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:26 pm

DIN

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி கி. சுந்தரேசன் கூறினாா்.

சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பட்டாசு ஆலையில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கி. சுந்தரேசன் பேசியதாவது: மருந்துக் கலவை அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். வேலைக்கு அதிகமாக பணியாளா்களை அனுமதிக்கக் கூடாது. ஒதுக்கப்பட்ட அறைக்கு உரிய வேலையை மட்டுமே அந்த அறையில் செய்ய வேண்டும். திரி தயாரிக்கப் பயன்படும் ராட்டைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அனைத்து அறைகளிலும் ரப்பா் மேட் விரிக்க வேண்டும். சாட்டைத் திரி மற்றும் கருந்திரி வெட்ட தனித்தனி மேஜையை பயன்படுத்த வேண்டும். பணி அறையை சுத்தமாக வைத்திக்க வேண்டும். பட்டாசு பாதுகாப்பு விதிமுறைகளை தொழிலாளா்களுக்கு நிா்வாகம் கூற வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கத்தலைவா் ப. கணேசன், சங்க முதுநிலை ஆலோசகா் ஏ.பி. செல்வராஜன் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.