புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அருப்புக்கோட்டையில் மழை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் திங்கள்கிழமை பிற்பகலில் மிதமான மழை பெய்தது.

News image

அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் மழையின்போது.

Updated On :4 அக்டோபர் 2021, 11:46 am

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் திங்கள்கிழமை பிற்பகலில் மிதமான மழை பெய்தது.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் திங்கள்கிழமை பகல்வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், பிற்பகல் சுமார் 3.50 மணி முதல் கருமேகங்கள் திரண்டு மிதமான மழை பெய்தது. அதிக காற்று வீச்சு இல்லாமல், இடி மின்னலின்றி அமைதியாகப் பெய்த இம்மழையால் சாலைகளில் மழைநீர் திரண்டு ஓடியது.

பள்ளமான நகர்பகுதிகளான காந்தி பொட்டல், புதுக்கடை பஜார், திருவள்ளுவர் நகர், நேரு நகர் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சுமார் 25 நிமிடங்கள் பெய்த இம்மழைக்குப்பின் குளிர்ந்த காற்றுடன் இதமான தட்பவெப்பம் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.