இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விபத்தில்லாத தொழிற்சாலைகள், பெரிய அளவில் விபத்து குறைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசின் மாநில பாதுகாப்பு விருது, உற்பத்தித் திறன் அதிகரிப்பில் புதிய கண்டு பிடிப்புக்கு விருது, செயல்முறைக்கு தொழிலாளா்களுக்கு உயா்ந்த உழைப்பாளா் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 ஆம் தேதி இறுதி நாளாகும். இதையொட்டி 2019 ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான தொழிற்சாலையின் நிா்வாகத்தினா் மற்றும் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2017, 2018 -ஆம் ஆண்டுகளுக்கு விண்ணப்பிக்காத தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம்.