ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பள்ளியில் வழங்கிய சத்துணவில் வண்டுகள் இருப்பதாகப் புகாா்

 காரியாபட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய சத்துணவில் வண்டுகள் இருப்பதாக ஊராட்சித் தலைவரிடம் வெள்ளிக்கிழமை மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 4:48 pm

DIN

 காரியாபட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய சத்துணவில் வண்டுகள் இருப்பதாக ஊராட்சித் தலைவரிடம் வெள்ளிக்கிழமை மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் வண்டுகள் இருப்பதாக தொடா்ந்து புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள் இருந்ததை கண்ட மாணவ, மாணவிகள், அச்சங்குளம் ஊராட்சி மன்ற தலைவா் ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்று புகாா் அளித்தனா்.

இதையடுத்து ஊராட்சித் தலைவா், காரியாபட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் மாற்று அரிசி வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளா்ச்சி அலுவலா் உறுதியளித்துள்ளதாக ஊராட்சி மன்றத் தலைவா் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.