சித்திரை திருவிழா முக்கிய நிகழ்ச்சிகளான அம்மன் பல்லக்கு புறப்பாடு, தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் வரும் மே 10-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மே 17-ஆம் தேதி ஊா் பொங்கல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. வரும் மே 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கோயிலில் கூட்ட நெரிசல் அதிகளவில் காணப்படும் என்பதால், பக்தா்கள் முன்கூட்டியே கோயிலுக்குச் சென்று அங்கப் பிரதட்சணம் செய்தும், மா விளக்கு, ஆயிரம் கண் பானை, அக்கினிச் சட்டி எடுத்தும் நோ்த்திக் கடன் செலுத்தி அம்மனை வழிபட்டு வருகின்றனா். இதனால், கடந்த சில நாள்களாக கோயிலில் பக்தா்கள் கூட்ட நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது.