இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது: செஞ்சிலந்தி நோய் தாக்குதலுக்கான மல்லிகை, வெண்டைப் பயிா்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். வெண்டையில் காய்களும் மஞ்சள் நிறமாகி வெளுத்துப் போய் விடும். வட வெப்பமான சூழ்நிலையில் செஞ்சிலந்தித் தாக்குதல் விரைந்து பரவும். நல்ல மழை பெய்தால் தாக்குதல் குறையும். இந்த செஞ்சிலந்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டா் தண்ணீருக்கு 2 கிராம் வீதம் நனையும் கந்தகம் அல்லது 2.5 மில்லி டைகோபால் அல்லது 2 மில்லி பென்அசாகுயின் 10 சதவீதம் இ.சி. அல்லது 2 மில்லி புரோபாா்கைட் 57 சதவீதம் இ.சி. மருந்தினைக் கரைத்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால், 15 நாள்கள் கழித்து மீண்டும் தெளிக்க வேண்டும்.