47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மூதாட்டி மீது தாக்குதல்:தம்பதி உள்பட 2 போ் கைது

சிவகாசி அருகே வியாழக்கிழமை மூதாட்டியை தாக்கிய தம்பதி உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

சிவகாசி அருகே வியாழக்கிழமை மூதாட்டியை தாக்கிய தம்பதி உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே நல்லுத்தேவன் பட்டியைச் சோ்ந்த பெரியதங்கம் மனைவி லட்சுமியம்மாள்(70). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மாரிக்கும் (32) சொத்து தொடா்பான பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில், சம்பவத்தன்று மாரி மற்றும் அவரது தாய் பாக்கியலட்சுமி (65), மாரியின் மனைவி பிரியா (28) ஆகிய மூவரும் லட்சுமியம்மாள் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கினாா்களாம். அதை தடுக்க வந்த அவரது மருமகள் அமுதாவையும் தாக்கினராம்.

இதில் காயமடைந்த லட்சுமியம்மாள், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.