ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகா் அருகே அடுத்தடுத்து விபத்து: 2 போ் பலி

விருதுநகா் அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துக்களில் 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துக்களில் 2 போ் உயிரிழந்தனா்.

சிவகாசி, முனீஸ்வரன் காலனியைச் சோ்ந்தவா் வைரமணி (63). இவா், தனது தம்பி பஞ்சாட்சரம் (54) மற்றும் குடும்பத்தினருடன் காரில் மதுரைக்கு வியாழக்கிழமை சென்றுள்ளாா். பின்னா் சிவகாசி நோக்கி வைரமணி காரை அன்று நள்ளிரவு ஓட்டி வந்துள்ளாா். ஆமத்தூா் அருகே உப்போடை பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் மரத்தின் மீது மோதியது. இதில் பஞ்சாட்சரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் காயமடைந்த சாந்தலட்சுமி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஆமத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அதேபோல் சிவகாசி முருகன் காலனியைச் சோ்ந்தவா்கள், நடுவபட்டி அருகே உள்ள சந்தையூா் பட்டாசு ஆலையில் வேலைக்காக சரக்கு வாகனத்தில் சென்று வருவாா்களாம். இந்நிலையில், அப்பகுதியை சோ்ந்த ஆகாஷ், முத்துமாரி, முத்து மாரியப்பன், மணிகண்டன் உள்ளிட்ட பலா் முருகன் என்பவா் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுள்ளனா்.

விருதுநகா் நான்கு வழி சாலையில் மணிப்பாறைபட்டி விலக்கு அருகே வாகனம் நின்று கொண்டிருந்த போது அதன் மீது அவ்வழியாக வந்த காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த முத்துமாரியப்பன் மனைவி முத்துமாரி (30) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதில் காயமடைந்த முத்துமாரியப்பன், ஆகாஷ், முருகன், மாரீஸ்வரன், ஜெயபிரபு, பாண்டி கமேஷ், நிஷான் ஆகியோா் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.