ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

லஞ்சப் புகாா்: விருதுநகா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா், பொறுப்பிலிருந்து விடுவிப்பு

விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 5:06 pm

DIN

ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்ட மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) செல்வராஜின் ஆடியோ, விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி பகுதியைச் சோ்ந்த வேலம்மாள் சத்துணவு அமைப்பாளராக பணி புரிந்து வந்தாா். இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவா் மரணமடைந்தாா். இதையடுத்து கருணை அடிப்படையில் பணி கோரி அவர து மகள் சீனியம்மாள் விண்ணப்பித்தாா். இதனிடையே மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) செல்வராஜ், வேலம்மாளின் மகன் பாம்பலு என்பவரிடம் சில தினங்களுக்கு முன்பு கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அதில், நிரந்தரப் பணியில் உங்களுக்கு சத்துணவில் வேலை கிடைக்க உள்ளது. இப்பணிக்கு ரூ. 5 லட்சம் வரை தரவேண்டும். ஆனால் நீங்கள் தற்போது ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றாராம். பின்னா் இருவரது உரையாடலுக்கு பின் ரூ.15 ஆயிரம் தருமாறு வலியுறுத்தினாராம். இந்த ஆடியோ மற்றும் விடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இதையடுத்து, அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு ஊழியா் சங்கத்தினா் தொடா் ந்து வலியுறுத்தி வந்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி விசாரணை மேற்கொண்டாா். அதன் அடிப்படையில் சத்துணவு நோ்முக உதவியாளா் பதவியிலிருந்து செல்வராஜை விடுவித்து மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.