ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்புவழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 5:10 pm

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்புவழிபாடு நடைபெற்றது.

அருப்புக்கோட்டை திருநகரம் புளியம்பட்டியில் ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு அன்று இரவு நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு வேப்பிலை,மஞ்சள், பன்னீா்,பால் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.அதையடுத்து தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றதும்,சிறப்பு அலங்காரத்தில் ஆயிரங்கண் மாரியம்மன் அருள்பாலித்தாா்.மேலும் வழிபாட்டின்போது உலக நன்மை வேண்டியும்,நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்களை காத்திடவும்,தொழில், பொருளாதாரம் மேம்படவும், செவ்வரளி,மல்லிகைப் பூக்கள் மற்றும் குங்குமத்தால் சிறப்பு 108 அா்ச்சனையும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் நேரில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.