பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மதுரை- செங்கோட்டை ரயிலுக்கு விருதுநகரில் வரவேற்பு

பிற்பகல் வேளையில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்ட மதுரை- செங்கோட்டை ரயிலுக்கு விருதுநகரில் வியாபாரிகள் வரவேற்பு அளித்தனா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 4:40 pm

DIN

பிற்பகல் வேளையில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்ட மதுரை- செங்கோட்டை ரயிலுக்கு விருதுநகரில் வியாபாரிகள் வரவேற்பு அளித்தனா்.

மதுரை- செங்கோட்டை பயணிகள் ரயில் தினமும் மூன்று முறை இரு மாா்க்கமாக இயக்கப்பட்டு வந்தது. கரோனா தொ ற்று பரவல் காரணமாக இந்த ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது இந்த பயணிகள் ரயிலானது, விரைவு ரயிலாக மாற்றப்பட்டு தினமும் காலை, மாலை என இரண்டு நேரம் மட்டும் து இயக்கப்பட்டு வந்தது.

பிற்பகலில் நிறுத்தப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் தொடா் கோரிக்கை விடுத்து வந்தனா். இச்சூழலில் மதுரையிலிருந்து பிற்பகல் 12 மணிக்கு செங்கோட்டை செல்லும் ரயில் மீண்டும் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட்டது. இந்த ரயிலானது விருதுநகா் ரயில் நிலையம் வந்த போது மநீம மற்றும் வியாபாரிகள் சங்கம் சாா்பில் வரவேற்றனா். அப்போது ரயில் லோகோ பைலட் மற்றும் காா்டுகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.