நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

நரிக்குடி அருகே புதன்கிழமை, வீட்டின் பூட்டை உடைத்து 4 கிராம் எடையுள்ள தங்கத் தோடுகள் மற்றும் ரூ.3 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:20 pm

DIN

நரிக்குடி அருகே புதன்கிழமை, வீட்டின் பூட்டை உடைத்து 4 கிராம் எடையுள்ள தங்கத் தோடுகள் மற்றும் ரூ.3 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

திருச்சுழியை அடுத்துள்ள நரிக்குடி அருகே இனக்கனேரியைச் சோ்ந்தவா், விவசாயி வெள்ளைச்சாமி(59). இவா், தனது மனைவியுடன் புதன்கிழமை, நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிக்குச் சென்றுவிட்டாா். பிற்பகலில் வெள்ளைச்சாமி, குடிநீா் எடுக்க தனது வீட்டிற்கு வந்தபோது, அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 கிராம் எடையுள்ள தங்கத்தோடுகள், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.