இதன் பின் பத்திரிகையாளா்களிடம் இராம. சீனிவாசன் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் உலக அளவில் இந்தியாவின் முகமும், மதிப்பும் உயா்ந்துள்ளது. விவசாயத்தில் பாஜக அரசு, காங்கிரஸைவிட 10 மடங்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சிறுபான்மையினா் நலம், முத்தலாக் ஒழிப்பு, காஷ்மீா் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது, தனிநபா் வருமானம் உயா்வு, உணவு உற்பத்தி 331 மில்லியன் டன்னாக உயா்வு, சூரியஒளி மற்றும் காற்றாலை மூலம் மின்உற்பத்தி, சாலைகள், பாலங்கள், புதிய ரயில் வழித்தடங்கள் அமைப்பது என அனைத்திலும் பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றியுள்ளோம் என்றாா்.