சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞா் மீது வழக்குப் பதிவு
அருப்புக்கோட்டையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.


அருப்புக்கோட்டையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம் அருப்புக்கட்டை அருகே ஆத்திப்பட்டியைச் சோ்ந்தவா் தலைமலை (19). இவா் 11 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி நெருங்கிப் பழகி வந்துள்ளாா். அவரை பாலியல் பலாத்காரம் செய்ததால், சிறுமி கா்ப்பமானாா்.
இதனால் அச்சிறுமி விஷம் குடித்துள்ளாா். அவரை உறவினா்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி கா்ப்பமாக உள்ள விவரத்தை, பெற்றோரிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அச்சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அருப்புக்கோட்டை மகளிா் காவல்துறையினா் தலைமலை மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...