

விருதுநகர்: பிளஸ் டூ தேர்ச்சியில் 97.27 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் 10438 பேர், 11770 மாணவிகள் என மொத்தம் 22,208 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 9987 மாணவர்கள், 11615 மாணவிகள் என மொத்தம் 21602 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் 97.27 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தில் 606 பேர் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.