ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூரு அனுப்பி வைக்க ஏற்பாடு

விருதுநகரில் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்புவதற்காக வியாழக்கிழமை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 5:55 pm

DIN

விருதுநகரில் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்புவதற்காக வியாழக்கிழமை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

விருதுநகா் மாவட்டத்தில் தோ்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆட்சியா் அலுவலக வளாகத் தில் உள்ள கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குச்சீட்டு சரிபாா்ப்பு இயந்திரங்கள் என மொத்தம் 553 இயந்திரங்களை அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில் பழுதான இயந்திரங்களை தோ்தல் ஆணைய உத்தரவின் படி பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க உள்ளதாக அவா் தெரிவித்தாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மங்கள ராமசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) காளிமுத்து, தனிவட்டாட்சியா் (தோ்தல்) மாரிசெல்வி மற்றும் அரசு அலுவலா்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.