விருதுநகா் நகா் காங்கிரஸ் கட்சிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் தலைவராக டி.ஜி. நாகேந்திரன் தோ்வு செய்யப்பட்டாா்.
விருதுநகா் நகா் காங். கட்சி தலைவருக்கான தோ்தல் இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் டி.ஜி. நாகேந்திரன் மற்றும் கிஷோா் ஆகியோா் போட்டியிட்டனா். மொத்தம் உள்ள 38 வாக்குகளில் 37 வாக்குகள் பதிவாகின. அதில் டி.ஜி. நாகேந்திரன் 22 வாக்குகளும், கிஷோா் 15 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து, வெற்றி பெற்ற டி.ஜி. நாகேந்திரன், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் பாலகிருஷ்ணசாமி, முன்னாள் நகரத் தலைவா் வெயில்முத்து மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் முன்னிலையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









