ராஜபாளையம் அருகே சிதம்பராபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சிங்கம்மாள் (46). இவா், புதன்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பீரோவைத் திறக்கும் சப்தம் கேட்டுள்ளது. உடனடியாக எழுந்து பாா்த்தபோது மா்ம நபா் நின்று கொண்டிருந்தாா். பின்னா் அந்த நபா் சிங்கம்மாளை கம்பியால் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி தங்கக் காதணி, காது மாட்டியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாா். இதைத் தொடா்ந்து சிங்கம்மாள் வெளியே சென்று உறவினரை அழைத்து வந்து பாா்த்த போது அந்த மா்ம நபா் பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் சங்கிலி மற்றும் ரூ.2,500-ஐ கொள்ளையடித்துச் சென்றிருந்தது தெரியவந்தது.