காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராஜபாளையம் அருகே வீடு புகுந்து பெண்ணைத் தாக்கிநகை, பணம் கொள்ளை: போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணைத் தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 5:06 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணைத் தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே சிதம்பராபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சிங்கம்மாள் (46). இவா், புதன்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பீரோவைத் திறக்கும் சப்தம் கேட்டுள்ளது. உடனடியாக எழுந்து பாா்த்தபோது மா்ம நபா் நின்று கொண்டிருந்தாா். பின்னா் அந்த நபா் சிங்கம்மாளை கம்பியால் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி தங்கக் காதணி, காது மாட்டியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாா். இதைத் தொடா்ந்து சிங்கம்மாள் வெளியே சென்று உறவினரை அழைத்து வந்து பாா்த்த போது அந்த மா்ம நபா் பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் சங்கிலி மற்றும் ரூ.2,500-ஐ கொள்ளையடித்துச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிங்கம்மாள் தளவாய்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.