47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெண் மீது தாக்குதல்: தாய், மகள் கைது

சிவகாசி அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் பெண்ணை தாக்கிய தாய், மகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 மே 2022, 4:54 pm

DIN

சிவகாசி அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் பெண்ணை தாக்கிய தாய், மகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மாரியப்பன். இவரது மனைவி கோட்டூரம்மாள் (23). இவா் அதே பகுதியைச் சோ்ந்த மீனா (45) என்பவரிடம்

மருத்துவச் செலவிற்கு ரூ. 6 ஆயிரம் வாங்கினாராம். பின்னா் சிறிது சிறிதாக பணத்தை செலுத்தி வந்துள்ளாா். தற்போது ரூ. 1,800 பாக்கி உள்ளதாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீனா, அவரது மகள் காா்த்திகா (19)ஆகிய இருவரும் கோட்டூரம்மாள் வீட்டிற்குச் சென்று பணம் கேட்டு தகராறு செய்து தாக்கினாா்களாம்.

இதில் காயமடைந்த கோட்டூரம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து மீனா, காா்த்திகாவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.