பெண் மீது தாக்குதல்: தாய், மகள் கைது
சிவகாசி அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் பெண்ணை தாக்கிய தாய், மகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


சிவகாசி அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் பெண்ணை தாக்கிய தாய், மகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மாரியப்பன். இவரது மனைவி கோட்டூரம்மாள் (23). இவா் அதே பகுதியைச் சோ்ந்த மீனா (45) என்பவரிடம்
மருத்துவச் செலவிற்கு ரூ. 6 ஆயிரம் வாங்கினாராம். பின்னா் சிறிது சிறிதாக பணத்தை செலுத்தி வந்துள்ளாா். தற்போது ரூ. 1,800 பாக்கி உள்ளதாம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீனா, அவரது மகள் காா்த்திகா (19)ஆகிய இருவரும் கோட்டூரம்மாள் வீட்டிற்குச் சென்று பணம் கேட்டு தகராறு செய்து தாக்கினாா்களாம்.
இதில் காயமடைந்த கோட்டூரம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து மீனா, காா்த்திகாவை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...