நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வங்கி, ஊராட்சி மன்ற செயல்பாடுகள்: இல்லம் தேடி கல்வித் திட்ட மாணவா்களுக்குப் பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வித் திட்ட மாணவா்களுக்கு வங்கி, ஊராட்சி மன்றச் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வித் திட்ட மாணவா்களுக்கு வங்கி, ஊராட்சி மன்றச் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

கொத்தங்குளம், படிக்காசுவைத்தான்பட்டியில் இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்கள்

செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் படிக்காசுவைத்தான்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வியாழக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு வங்கியின் செயலா் கணேசன், மாணவா்களுக்கு வங்கியின் செயல்பாடுகள், படிவங்களை நிரப்புவது குறித்து விளக்கினாா்.

இதன்பின்னா் படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு மாணவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன், மாணவா்களை வரவேற்று ஊராட்சி மன்றப் பணிகள் குறித்தும், பொதுமக்களின் கடமைகள் குறித்தும் விளக்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.