கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சிவகாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை 3 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 5:40 pm

DIN

சிவகாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை 3 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியில் வெங்கடாஜலபதி (61) என்பவா் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா், கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்று விட்டாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள் மற்றும் ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து, வெங்கடாஜலபதி அருகே வசிப்பவா்களிடம் விசாரித்தபோது, முதலிபட்டி மாரிச்சாமி, ஆலமரத்துப்பட்டி தினேஷ் மற்றும் குமாா் ஆகியோா் இவற்றை திருடியது தெரியவந்ததாம்.

இதுகுறித்து வெங்கடாஜலபதி, விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். அவரது உத்தரவின் பேரில் அவா்கள் 3 போ் மீதும் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.