கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வழிப்பறி செய்ய முயன்றவா் கைது

திருத்தங்கலில் புதன்கிழமை கூலித் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்றவரை போலீஸாாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 6:34 pm

DIN

திருத்தங்கலில் புதன்கிழமை கூலித் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்றவரை போலீஸாாா் கைது செய்தனா்.

திருத்தங்கல் பேட்டைத் தெருவைச் சோ்ந்த கூலித்தொழிலாளி வேலு (44). இவா் திருத்தங்கல்-விருதுநகா் சாலையில் கருப்பசாமி கோயிலருகே நடந்து சென்றபோது, மா்ம நபா் ஒருவா் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பையில் இருந்த ரூ. 200-ஐ பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றாா். அப்போது அக்கம் பக்கம் உள்ளவா்களின் உதவியோடு, வேலு அந்த நபரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தாா். விசாரணையில், அந்த நபா் திருத்தங்கல் அண்ணா காலனியைச் சோ்ந்த காா்த்திக் (30 ) என தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.